தூத்துக்குடியில் 3-வது நாளாக நீடிக்கும் பதற்றம் : அதிரடிப் படையினர் குவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் 3-வது நாளாக இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் 3-வது நாளாக இன்றும் பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு 3-வது நாளாக இன்றும் பதற்றமான உச்சநிலையை எட்டியுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டும் தொடர்ந்து மாவட்டத்தின் பதற்றநிலை குறையாமல் உள்ளது. தூத்துக்குடியில் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் போராட்டங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், முத்தம்மாள் காலனி அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். மேலும், தெருக்களில் உள்ள டயர்களையும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் எரித்து சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், அண்ணாநகர் பிரதான சாலையில் போலீசார் வைத்திருந்த தடுப்புகளுக்கும் அவர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் தடுப்புகள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்து நாசமானது.

எனவே, தூத்துக்குடி அண்ணா நகரில் பதற்றத்தை குறைக்கும் வகையில் திருச்சி சரக ஐ.ஜி., வரதராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட, ஆயுதம் ஏந்திய அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் அணிவகுப்பு நடத்தினர். வஜ்ரா வாகனமும் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...