துப்பாக்கிச் சூடு சம்பவம்: கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை: தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு முடிவின் படி இன்றும், நாளையும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாளை நீதிமன்றங்களை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

வழக்கறிஞர்களின் இந்த புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் நிலையில் இந்த புறக்கணிப்பு போராட்டத்தால் பல ஜாமீன் மனுக்கள் ஒத்திவைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...