முதலமைச்சர் பதவி விலகக்கோரி மறியல் செய்த ஸ்டாலின் கைது

சென்னை: தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமைச்செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.


சென்னை: தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமைச்செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.



ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தை தி.மு.க.,வினர் புறக்கணித்தனர். மேலும், முதலமைச்சர் அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

கைது 

இதையடுத்து அவைக் காவலர்கள் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட அவர் தலைமை செயலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினார். அவருடன் ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். மேலும், போராட்டம் நடத்திய தி.மு.க., நிர்வாகிகளையும் கைது செய்தனர். 



ஸ்டாலின் ஏற்றப்பட்ட வேனை நகர விடாமல் தடுக்கும் வகையில் தி.மு.க.,வினர் சாலை மறியல் செய்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் பெரும் திணறினர்..

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...