சென்னை: தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமைச்செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
சென்னை: தூத்துக்குடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி தலைமைச்செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தை தி.மு.க.,வினர் புறக்கணித்தனர். மேலும், முதலமைச்சர் அறை முன்பு அமர்ந்து ஸ்டாலின் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முழு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், முதலமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
கைது
இதையடுத்து அவைக் காவலர்கள் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். வெளியேற்றப்பட்ட அவர் தலைமை செயலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினார். அவருடன் ஆயிரக்கணக்கான தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் ஸ்டாலினை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். மேலும், போராட்டம் நடத்திய தி.மு.க., நிர்வாகிகளையும் கைது செய்தனர்.

ஸ்டாலின் ஏற்றப்பட்ட வேனை நகர விடாமல் தடுக்கும் வகையில் தி.மு.க.,வினர் சாலை மறியல் செய்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் பெரும் திணறினர்..