ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுமி: மகளை மீட்கப் போராடிய தாய் மருத்துவமனையில் அனுமதி

திருப்பூர்: திருப்பூர் அருகே ஏரியில் சிக்கி சிறுமி உயிரிழந்த நிலையில், அவரை மீட்கப் போராடிய தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர்: திருப்பூர் அருகே ஏரியில் சிக்கி சிறுமி உயிரிழந்த நிலையில், அவரை மீட்கப் போராடிய தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெருமாநல்லூர் பட்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பனியன் தொழிலாளி ராமசாமி, ரோஷி தம்பதியினருக்கு பவித்ரதர்ஷினி (9), மற்றும் வைஷாலி (8) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். இந்நிலையில், ராமசாமி வேலைக்கு சென்றிருந்தார். இதனால், ரோஷி தனது இரு குழந்தைகளை அழைத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள ஏரியில் கால் கழுவச் சென்றுள்ளார். அந்த சமயம், பவித்ரதர்ஷினி எதிர்பாராதவிதமாக, சேற்றில் சிக்கிக் கொண்டார்.

மகள் சேற்றில் சிக்கிக் கொண்டதை பார்த்த தாய் ரோஷி, சிறுமியை மீட்க முயன்றார். அப்போது, அவரும் சேற்றில் மாட்டிக் கொண்டார். இதனால், பயந்து போய் மற்றொரு மகளான வைஷாலி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்த ரோஷியை மீட்டனர். ஆனால், சேற்றின் அழுத்தத்தால் சிறுமி பவித்ரதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், சேற்றில் சிக்கி உயிரிழந்த பவித்ரதர்ஷினியின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரோஷிக்கு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...