'ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு': தூத்துக்குடி கலவரத்தில் போலீசாரின் அதிர்ச்சிகர வீடியோ

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி: தூத்துக்குடி கலவரத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க, தடியடி நடத்திய போலீசார், உச்சகட்டமாக துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தினர். அதில், சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, போலீஸ் அதிகாரி ஒருவர், சக போலீசாரிடம் ஒருத்தனையாவது சுட்டுக்கொல்லு எனப் பேசிய ஆடியோ வீடியோவில் பதிவாகியுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இதேபோல, தூத்துக்குடியில் 2-வது நாளாக போலீசார் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, காளியப்பன் என்ற 22 வயது இளைஞர் பலியானார். அவரது உடலின் அருகே சென்ற போலீசார், ’நடிக்கிறான், நடிக்கிறான்’ என்று கூறினர். மற்றொரு போலீசார், ’ஏய் ரொம்ப நடிக்காதே போ’ என்று கூறினார். போலீசாரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...