தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சியா..?: பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்

கோவை: சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு கோவை பால் முகவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கோவை: சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு கோவை பால் முகவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கம் கூறியிருப்பதாவது :- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர். அப்பாவி பொதுமக்களைச் சுட்டுக் கொன்ற போலீசாரின் வெறியாட்டத்தை தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் சமூக வலைதளங்களின் வாயிலாக தங்களின் பாதிப்பை உலகறிய செய்து வருகின்றனர். ஊடகங்களையெல்லாம் தங்களின் மிரட்டல்களால் கட்டுப்படுத்தி, காட்டாட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு, தற்போது தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவைகளை முற்றிலுமாக முடக்கியிருப்பதாக அறிகிறோம்.

ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகளின் ஆட்சியைக் கண் முன்னே நடத்திக் கொண்டு, எமர்ஜென்சி காலகட்டத்தை நினைவூட்டும் விதமாக செயல்பட்டு வரும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கும் இணையதள சேவைகளை உடனடியாக வழங்கிட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்யும் ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் நீண்ட காலமாக ஆட்சியில் நீடிக்க முடியாது என்பது வரலாறு கூறும் உண்மை. எனவே, மக்கள் விரோத அரசாக இருக்கும் அ.தி.மு.க., அரசு உடனடியாக மக்கள் நலனுக்கு ஆதரவான அரசாக மாற வேண்டும். இல்லையெனில், ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்க கடமைப்பட்டுள்ளோம், இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...