தூத்துக்குடி: வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் இணைய சேவையை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி: வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் இணைய சேவையை முடக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இதனையடுத்து, அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் குறித்து வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கி வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரையிலும் மொபைல் போனிலும், இணைய சேவையை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்தப் பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் பதற்றம் நீடித்து வருகிறது. இதனையடுத்து, அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், போராட்டம் குறித்து வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்கும் வகையில் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கி வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரையிலும் மொபைல் போனிலும், இணைய சேவையை துண்டிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.