நீலகிரி: தூத்துக்குடியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், நீலகிரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை சென்னை புறப்பட்டார்.
நீலகிரி: தூத்துக்குடியில் 2-வது நாளாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், நீலகிரியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலை சென்னை புறப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21-ம் தேதி மாலை உதகைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து வரும் ஜுன் 2-ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாவில் பங்கேற்க ஆளுநர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று நடந்த கலவரம் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை ஆளுநர் தனது குடும்பத்தாருடன் உதகை ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தார். தூத்துக்குடியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஆளுநர் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து கோத்தகிரி வழியாக கார் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் கலந்துக் கொள்ள கடந்த 21-ம் தேதி மாலை உதகைக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்ற ஆளுநர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து வரும் ஜுன் 2-ம் தேதி வரை உதகையில் தங்கியிருந்து பல்வேறு அரசு விழாக்கள் மற்றும் தனியார் விழாவில் பங்கேற்க ஆளுநர் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று நடந்த கலவரம் 2-வது நாளாக இன்றும் நீடித்தது. இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் வலுத்த நிலையில், அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, இன்று காலை ஆளுநர் தனது குடும்பத்தாருடன் உதகை ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் ஆகிய சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தார். தூத்துக்குடியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், ஆளுநர் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனிடையே, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை ஆளுநர் மாளிகையில் இருந்து கோத்தகிரி வழியாக கார் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
