தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு; போலீஸ் வாகனங்களுக்கு தீ: சடலத்தை வாங்கவிடாமல் விரட்டும் அரசு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை விவகாரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடலை வாங்க சென்ற உறவினர்களை, கூட்டம் கூட்டுவதாக கூறி போலீசார் தடியடி நடத்தினர்.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை விவகாரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடலை வாங்க சென்ற உறவினர்களை, கூட்டம் கூட்டுவதாக கூறி போலீசார் தடியடி நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 ஆப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆணையை பிறப்பித்த அரசு இறந்தவர்களுக்காக அனுதாபமும் பட்டு இரங்கல் அறிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில், அம்மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை வரும் 25-ம் தேதி வரை நீடித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

வன்முறையின் போது உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெற உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். ஆனால், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், யாரும் கூட்டம் கூடாது என்று போலீசார் எச்சரித்தனர். மேலும், உறவினர்களை அடித்து விரட்டினர். கண்ணீரோடு இருந்த பொதுமக்கள் அடிக்குப் பயந்து அலறியடித்து ஓடினர். ஒரு சிலர் சடலத்தை வாங்க மறுத்தனர் அவர்களை விரட்ட போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தீ

உச்சக்கட்ட அராஜகப் போக்குடன் செயல்படும் காவல் துறையினரைக் கண்டிக்கும் வகையில், போலீஸ் வானங்கள் மீது சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இதன் காரணமாக அம்மாவட்டத்தில் பரப்பு இன்னும் நீடிக்கிறது.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் தூத்துக்குடிக்கு போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...