10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் 97.18 சதவீதம்; நீலகிரி 95.20 சதவீதம் தேர்ச்சி

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 97.18 சதவீதம் பேரும், நீலகிரி மாவட்டத்தில் 95.20 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் திருப்பூர் மாவட்டத்தில் 97.18 சதவீதம் பேரும், நீலகிரி மாவட்டத்தில் 95.20 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழகத்தில்  94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 336 பள்ளிகளைச் சேர்ந்த 13,987 மாணவர்கள் மற்றும் 14,227 மாணவிகள் என மொத்தம் 28,214 பேர் பத்தாம் வகுப்பு தேர்வெழுதினர். இதில் 13,486 மாணவர்கள் மற்றும் 13,932 மாணவிகள் என 27,418 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 97.06 சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழகத்தில் 7-ஆம் இடத்தைப் பிடித்திருந்தது. இந்தாண்டு 97.18 சதவீதம் பெற்று தமிழகத்தில் அதே 7-வது இடத்தைத் தக்கவைத்துள்ளது.

நீலகிரி

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 95.20% சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 8,225 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,830 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மொத்தம் 2,745 பேர் தேர்வு எழுதினர். அதில், 2,487 பேர் தேர்ச்சி பெற்று, அரசுப் பள்ளிகளில் 90.60 சதவீதமாக தேர்ச்சி விகிதம் உள்ளது.



இந்த ஆண்டு 95.20 சதவீதம் தேர்ச்சி விகிதமாக உள்ள நிலையில், இது கடந்த ஆண்டை விட 0.11 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...