ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு : கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து கோவையில் நேற்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை : ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து கோவையில் நேற்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

அரசின் இந்த ஒடுக்குமுறையைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

துப்பாக்கிச் சூடு நடத்திய காவல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.


Video: Laxman

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...