கோவையில் லஞ்சம் வாங்கிய வேளாண் இணை இயக்குனர் கைது

கோவையில் லஞ்சம் வாங்கிய வேளாண் இணை இயக்குனர் கைது

கோவை: வேளாண் இணை இயக்குனர் சுகுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர்.

புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் பொள்ளாச்சியில் உள்ள தனது 10 ஏக்கர் விவசாய நிலத்தை மனையடி நிலமாக மாற்ற என்.ஓ.சி (தடையில்லா சான்றிதழ்) பெற வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை அணுகினார். 

இந்த நிலையில், விவசாய நிலத்தை மனையடி நிலமாக மாற்ற வேளாண் இணை இயக்குனர் ரூ.1.5 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அசோக் குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

பின்னர், நேற்று மாலை தடாகம் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார், வேளாண் இணை இயக்குனர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அதேபோல், அவரது உதவியாளர் முருகனும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Video : Laxman

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...