பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு ; 94.5 சதவீதம் தேர்ச்சி

கோவை : தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கோவை : தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழகத்தில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகம், புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை தமிழகத்தில் இருந்து மட்டும் 4,74,340 மாணவர்கள், 4,76,057 மாணவிகள் என 9,50,397 பேர் எழுதினர். இதுதவிர, 50,743 பேர் தனித்தேர்வர்களாக தேர்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத் துறை இன்று வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் 

 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

5,584 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகள் 1,687 ஆகும். 2,06,796 பேர் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 



முதலிடம் 

சிவகங்கை மாவட்டம் 98.5 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. 98.38 சதவீத தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 98.26 சதவீத தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. 

மாணவர்கள் அளித்திருந்த செல் போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn. nic.in ஆகிய இணையதள முகவரிகள் மூலமாக தேர்வு முடிவுகளை பார்க்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...