இயற்கை வளங்களை பாதுகாக்க ஒவ்வொருவரின் பங்களிப்பு அவசியம்: உதகையில் ஆளுநர் பேச்சு

நீலகிரி: இயற்கை வளங்கள் வருங்கால சந்ததியினருக்கு நீடித்திருக்க ஒவ்வொருவரின் பங்களிப்பு அவசியம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார்.

நீலகிரி: இயற்கை வளங்கள் வருங்கால சந்ததியினருக்கு நீடித்திருக்க ஒவ்வொருவரின் பங்களிப்பு அவசியம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார். 

உதக மண்டல அரசு தாவிரவியல் பூங்காவில் 122-வருடாந்திர மலர் காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசுகையில், "இயற்கை அன்னையைப் போன்றது, அதனை மதித்து செயல்பட வேண்டும். இயற்கையின் அழகை மலர்களால் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பாக உள்ளது. இத்தகைய மலர் காட்சிகள் கண்களுக்கு விருந்து படைப்பதோடு, மலர் மற்றும் பூந்தோட்ட ஆர்வலர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கிறது. மேலும், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலர்கள் பற்றிய முதல் தகவல்களை அறிகின்ற வகையில் இங்கு துலிப், டிஸ்பட்ஸ் மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.



நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற இயற்கை வளங்கள் வருங்கால சந்ததியினருக்கு அதிகளவு கிடைக்க நாம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்." என்றார்.

இந்த விழா முடிந்து வெளியே வந்த ஆளுநரிடம் செய்தியாளர்கள், தூத்துக்குடி வன்முறை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். ஆனால், ஆளுநர் எந்த பதிலையும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...