தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்ததாகவும் 77 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்ததாகவும் 77 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று 100-வது நாள் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.

முற்றுகை போராட்டத்திற்காக ஊர்வலமாக வந்த மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. இந்த மோதலின் போது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த மக்கள் கற்களை வீசி, அலுவலக கண்ணாடிகளை உடைத்தனர். மேலும், ஸ்டெர்லைட் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த சூழலில், நிலைமை கை மீறி போனதாகக் கூறி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 10-ம் வகுப்பு மாணவி உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 77 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரங்கல்
இக்கட்டான சூழலில் தான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் கூறி தனது இரங்கல் செய்தியை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக ஆளுநரும் இந்த சம்பவத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அரச பயங்கரவாதம்
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டங்களைத் தெரிவித்த நிலையில், மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் கொல்லப்பட்டது, அரச பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணமாகும். அநீதிக்காகப் போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். என்னுடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பற்றியே உள்ளது." என்று கூறியுள்ளார்.
இந்த சூழலில், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த பின்னர், நிவாரணம் கொடுப்பது ஒரு குடும்பத்திற்கு ஈடாகாது என்றும், இந்த அரசு மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் தொடர் போராட்டத்தினை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று 100-வது நாள் போராட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டது.

முற்றுகை போராட்டத்திற்காக ஊர்வலமாக வந்த மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே திடீர் மோதல் வெடித்தது. இந்த மோதலின் போது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகின. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகுந்த மக்கள் கற்களை வீசி, அலுவலக கண்ணாடிகளை உடைத்தனர். மேலும், ஸ்டெர்லைட் குடியிருப்பு பகுதிகளுக்கு தீ வைக்கப்பட்டது.
இந்த சூழலில், நிலைமை கை மீறி போனதாகக் கூறி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 10-ம் வகுப்பு மாணவி உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 77 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரங்கல்
இக்கட்டான சூழலில் தான் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும், இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாகவும் கூறி தனது இரங்கல் செய்தியை வெளியிட்டார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழக ஆளுநரும் இந்த சம்பவத்திற்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அரச பயங்கரவாதம்
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டங்களைத் தெரிவித்த நிலையில், மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் கொல்லப்பட்டது, அரச பயங்கரவாதத்தின் கொடூரமான உதாரணமாகும். அநீதிக்காகப் போராடிய மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார்கள். என்னுடைய எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பற்றியே உள்ளது." என்று கூறியுள்ளார்.
இந்த சூழலில், துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த பின்னர், நிவாரணம் கொடுப்பது ஒரு குடும்பத்திற்கு ஈடாகாது என்றும், இந்த அரசு மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதாகவும், தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.