இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றத்திற்கு எதிர்ப்பு : கோவையில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முற்றுகை

கோவை : இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


கோவை : இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட இந்திய குடிமை பணி தேர்வுகளில் புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பாக அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 



த.பெ.தி.க., பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.



Video: Laxman

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...