கோவை : இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : இந்திய குடிமை பணி தேர்வுகளில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட இந்திய குடிமை பணி தேர்வுகளில் புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கோவை பி.எஸ்.என்.எல் தலைமை அலுவலகம் முன்பாக அனைத்து கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

த.பெ.தி.க., பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், எஸ்.டி.பி.ஐ., மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Video: Laxman