பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகரும், பா.ஜ.க., பிரமுகருமான எஸ்.வி. சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகரும், பா.ஜ.க., பிரமுகருமான எஸ்.வி. சேகரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தேடப்படும் குற்றவாளியான எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாகப் பேசி தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு கடுமையான எதிர்ப்பு பத்திரிக்கையாளர்கள் இடமிருந்து கிளம்பியது. இது தொடர்பாக பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்த வழக்கில், எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவு தொடர்பாக கடுமையான கருத்துகளையும் கூறியது. ஆனாலும், போலீஸார் இதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை. அவர் வெளியே பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என சுதந்திரமாக நடமாடி வருகிறார். இந்நிலையில் தான், கரூர் ஜே.எம்-2 நீதிமன்றத்திலும் எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
எஸ்.வி.சேகர் மீதான இந்த வழக்கு விசாரணையில் வரும் ஜூலை 5-ம் தேதி, எஸ்.வி.சேகர் கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், முன்ஜாமீன் கோரி எஸ்.வி. சேகர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகரை கைது செய்ய ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தேடப்படும் குற்றவாளியான எஸ்.வி சேகர் பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாகப் பேசி தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவிற்கு கடுமையான எதிர்ப்பு பத்திரிக்கையாளர்கள் இடமிருந்து கிளம்பியது. இது தொடர்பாக பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்த வழக்கில், எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், எஸ்.வி.சேகரின் முகநூல் பதிவு தொடர்பாக கடுமையான கருத்துகளையும் கூறியது. ஆனாலும், போலீஸார் இதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை. அவர் வெளியே பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என சுதந்திரமாக நடமாடி வருகிறார். இந்நிலையில் தான், கரூர் ஜே.எம்-2 நீதிமன்றத்திலும் எஸ்.வி.சேகர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது. தமிழ் ராஜேந்திரன் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
எஸ்.வி.சேகர் மீதான இந்த வழக்கு விசாரணையில் வரும் ஜூலை 5-ம் தேதி, எஸ்.வி.சேகர் கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், முன்ஜாமீன் கோரி எஸ்.வி. சேகர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகரை கைது செய்ய ஜூன் 1-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.