திருப்பூர்: தேசிய இறகுப் பந்து அணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கான போட்டி திருப்பூரில் இன்று தொடங்கியது.
திருப்பூர்: தேசிய இறகுப் பந்து அணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கான போட்டி திருப்பூரில் இன்று தொடங்கியது.
இந்திய இறகுப் பந்து கழகம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறகுப் பந்து அணி தேர்வுக்கான போட்டிகள் திருப்புர் மோகன்ஸ் அகாடமியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 800 ஆண்கள் 400 பெண்கள் என 1200 இளம் வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவு, பெண்கள், இரட்டையர் பிரிவுகள் மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளின் கீழ் 920 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் ரேங்கிங் அடிப்படையில் முன்னணியில் உள்ள வீரர்களுடன், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில், வெற்றி பெறும் 14 வீரர்கள் தேசிய அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பைப் பெறுவர்.
வீரர்களைத் தேர்வு செய்ய, இந்திய வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜூவாலா கட்டா, வரும் 25-ம் தேதி வருகிறார். வட மாநிலங்களில் மட்டுமே நடைபெறும் இந்திய அணி தேர்வு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுவது தமிழக வீரர்களுக்கு சாதகமான அம்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தமிழக வீரர்கள் வெற்றி பெற ஊக்கத்தை வழங்குவதாகவும் வீரர்கள் கூறினார்.
இந்திய இறகுப் பந்து கழகம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறகுப் பந்து அணி தேர்வுக்கான போட்டிகள் திருப்புர் மோகன்ஸ் அகாடமியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 800 ஆண்கள் 400 பெண்கள் என 1200 இளம் வீரர்கள் கலந்து கொண்டனர்.

ஆண்கள் பிரிவு, பெண்கள், இரட்டையர் பிரிவுகள் மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளின் கீழ் 920 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் ரேங்கிங் அடிப்படையில் முன்னணியில் உள்ள வீரர்களுடன், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில், வெற்றி பெறும் 14 வீரர்கள் தேசிய அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பைப் பெறுவர்.
வீரர்களைத் தேர்வு செய்ய, இந்திய வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜூவாலா கட்டா, வரும் 25-ம் தேதி வருகிறார். வட மாநிலங்களில் மட்டுமே நடைபெறும் இந்திய அணி தேர்வு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுவது தமிழக வீரர்களுக்கு சாதகமான அம்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தமிழக வீரர்கள் வெற்றி பெற ஊக்கத்தை வழங்குவதாகவும் வீரர்கள் கூறினார்.