திருப்பூரில் இளையோருக்கான தேசிய இறகுப் பந்து அணி தேர்வு போட்டி தொடக்கம்

திருப்பூர்: தேசிய இறகுப் பந்து அணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கான போட்டி திருப்பூரில் இன்று தொடங்கியது.

திருப்பூர்: தேசிய இறகுப் பந்து அணிக்கு இளைஞர்களை தேர்வு செய்வதற்கான போட்டி திருப்பூரில் இன்று தொடங்கியது.

இந்திய இறகுப் பந்து கழகம் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இறகுப் பந்து அணி தேர்வுக்கான போட்டிகள் திருப்புர் மோகன்ஸ் அகாடமியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 800 ஆண்கள் 400 பெண்கள் என 1200 இளம் வீரர்கள் கலந்து கொண்டனர்.



ஆண்கள் பிரிவு, பெண்கள், இரட்டையர் பிரிவுகள் மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளின் கீழ் 920 லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர்கள் ரேங்கிங் அடிப்படையில் முன்னணியில் உள்ள வீரர்களுடன், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாடுகின்றனர். இதில், வெற்றி பெறும் 14 வீரர்கள் தேசிய அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பைப் பெறுவர்.

வீரர்களைத் தேர்வு செய்ய, இந்திய வீராங்கனையும், ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஜூவாலா கட்டா, வரும் 25-ம் தேதி வருகிறார். வட மாநிலங்களில் மட்டுமே நடைபெறும் இந்திய அணி தேர்வு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுவது தமிழக வீரர்களுக்கு சாதகமான அம்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது தமிழக வீரர்கள் வெற்றி பெற ஊக்கத்தை வழங்குவதாகவும் வீரர்கள் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...