ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும் - தமிழக அரசு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரியுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பல்வேறு காரணங்களால் ஸ்டெர்லைட் ஆலையை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை கடந்த மாதம் 9-ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்தது. மேலும், வாரியத்தின் அனுமதியின்றி தொழிற்சாலை இயக்கத்தினை தொடங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிராகரித்தல் ஆணையை எதிர்த்து அந்த நிறுவனம் கடந்த 17-ம் தேதி மேல் முறையீடு செய்தது. இந்த இந்த வழக்கின் மீதான விசாரணை வரும் ஜூன் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர்கள் அந்த ஆலைக்கு எதிராக கடுமையாக வாதாடியுள்ளனர். இந்த அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர் மற்றும் சில அமைப்பினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்த காரணத்தால் வேறு வழியின்றி காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. மேலும், அம்மாவட்டத்திற்கு கூடுதல் காவல்துறையினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டப்பூர்வ மேல் நடவடிக்கைகள் எடுக்கும். இதனை ஏற்று தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...