நீலகிரி வந்த ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு: உதகை மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்

நீலகிரி: உதகை மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நீலகிரிக்கு வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.

நீலகிரி: உதகை மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நீலகிரிக்கு வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வரவேற்றார்.

சென்னையிலிருந்து கோவை வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், கார் மூலம் உதகை சென்றார். அவரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் வரவேற்றனர். உதகை தாவரவியல் பூங்கா அருகே இருக்கும் ராஜ்பவனில் தங்கும் அவர், நாளை மாலை 3.45 மணிக்கு நடக்கும் 122-வது மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார். அப்போது, மலர் கண்காட்சியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

ஜூன் 2-ம் தேதி வரை உதகையில் தங்கும் ஆளுநர், பல்வேறு சுற்றுலா தளங்களைப் பார்வையிட்ட பிறகு, மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்கிறார். ஆளுநரின் இந்த வருகையையொட்டி, நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...