ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைக்கால கணக்கெடுப்புப் பணி இன்று தொடக்கம்

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைக்கால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது.

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடைக்கால வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி, உடுமலை மற்றும் அமராவதி ஆகிய ஆறு வனச்சரகங்கள் உள்ளன. இங்கு, யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான், கடமான் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் வசிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு இருமுறை வனத்துறையினர் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்., மே மாதங்களில் இப்பணி நடைபெறுகிறது. 

இந்த நிலையில், கோடைக்கால வனஉயிரினங்கள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை என 8 நாட்கள் நடக்கும் இப்பணியில் வேட்டைத் தடுப்பு காவலர்கள் உள்ளிட்ட வனத்துறையினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். முதல்நாளான இன்று புலி, சிறுத்தை, கரடி மற்றும் செந்நாயின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிற நாட்களில் புலிகள் வேட்டையாடும் உயிரினங்களின் அடிப்படையில் வன உயிரின கணக்கெடுப்பு நடக்கிறது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...