உதகை - கூடலூர் சாலையில் பேருந்து விபத்து: 18 பேர் படுகாயம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - கூடலூர் சாலையில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உதகையில் உள்ள தனியார் கோவில் திருவிழாவிற்கு கடந்த 18-ம் தேதி ஆந்திரா, மகாராஷ்டிரா, அரியானா மாநிலத்திலிருந்து விழாவில் பங்கேற்க 100-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இன்று திருவிழா முடிந்த நிலையில், பேருந்து மூலம் அவர்களது ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள 9வது மைல் பகுதியில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இதில், பேருந்தில் இருந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணித்த நிலையில், சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 2 பேரின் நிலை கவலைக்கிடம் என்பதால், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோடை சீசன் சமயத்தில் இந்த விபத்து நடைபெற்றதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...