மனதை ஈர்த்த மழலையர்களின் திரை நாடகம்: பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்த வேடங்கள்

கோவை: ஸ்தாயி திரையரங்கில் நடைபெற்ற திரை நாடகத்தில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு, அவர்களது திறமைகளை வெளிப்படுத்தியது பார்ப்போரின் எண்ணங்களைக் குதூகலப்படுத்தியது.

கோவை: ஸ்தாயி திரையரங்கில் நடைபெற்ற திரை நாடகத்தில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு, அவர்களது திறமைகளை வெளிப்படுத்தியது பார்ப்போரின் எண்ணங்களைக் குதூகலப்படுத்தியது.

கடந்த சில நாட்களாக, வருணபகவான் மழை பெய்வதற்கான வரத்தை கோவை மாவட்டத்திற்கு வழங்கி விட்டது போல, மாலை நேரத்தில் ஜோர் என மழை பெய்து வருகிறது. இதனால், பகலில் வெயிலின் தாக்கமும், இதன் காரணமாக இரவில் ஏற்படும் புழுக்கமுமின்றி மக்கள் நிம்மதி இருந்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த வரத்தின் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு காலவாதியாகிவிட்டது போலத் தெரிகிறது. மழை கோவையை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டது போலும். இந்த நிலையில், 'தி பிளே ஆப் நோஸி பார்க்கர்' என்ற தலைப்பில் ஸ்தாயி திரையரங்கில் கோடை காலப் பயிற்சி நாடகம் அரங்கேற்றப்பட்டது.



ஒரு நாடகம் அல்லது திரைப்படத்திற்கான காட்சிகளை எடுப்பதற்கு ஒருநாளிற்கு எவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்பதை நாம் அறிந்ததே. கடைசி நிமிடக் குழப்பம், ஆடை அலங்காரப் பிரச்சனைகள், சரியான புரிதலின்மை மற்றும் எதிர்பார்த்த அளவில் குழந்தைகளின் வருகையின்மை உள்ளிட்ட பல்வேறு நிலவும். இந்த சூழலில், திரை நாடக பயிற்சிப்பட்டறையை இயக்குநர் லியேன் ஜேம்ஸ், ஏற்பாட்டாளர் சாரு மற்றும் ஜெய்ஸ்ரீ மூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.



கடிகாரத்தில் முள் சாரியாக 06.30-ஐ தொட்டபோது, ஜெய்ஸ்ரீமூர்த்தி குழந்தைகளின் கண்கவர் நாடகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். ஸ்தாய் பயிற்சி பட்டறையில் சாருவிடம் இசையைக் கற்றுக் கொண்ட மாணவன் பிரதீப்பின் அழகிய இசையுடன் நாடகம் மெல்ல மெல்லத் தொடங்கியது. குழந்தைகள் மேடைக்கு வரும்போது, அவர்களது கதாபாத்திரத்தை பார்வையாளர்களால் எளிதில் புரிந்து கொள்ளும் வேடம் அணிந்திருந்தனர்.



அதோடு, வண்ணமயமிக்க விளக்குகள் மற்றும் விளக்குகளால் தயாரிக்கப்பட்ட சூரியன் போன்றவை நாடகத்திற்கு மேலும் மெருகூட்டியது. விஜய் டெண்டுல்கரின் ஆங்கில மொழிக் கலவையுடன் ராஜா, ராணி, நிதியமைச்சர், பிரதமர், மருத்துவர், ராணுவ வீரர் மற்றும் செருப்பு தைப்பவர் போன்ற கதாப்பாத்திரங்களுக்கு ஏற்றவாறு குழந்தைகள் தத்ரூபமாக வேடமணிந்திருந்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக, சுமார், 5 வயது சிறுமி சிறப்பாக நடித்து அசத்தினார்.



நாடகம் மேடையில் அரங்கேறிக் கொண்டிருக்க, பின்புறத்தில் இருந்து காட்சிகளுக்கு ஏற்றாற் போல, ஒலியை எழுப்பி குழந்தைகளை நடிக்க வைத்தனர். மேலும், அவ்வப்போது, தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை பாடியும் குழந்தைகள் அசத்தினர். நகைச்சுவை, கலாச்சாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த கலவையாக இருந்த இந்த நாடகத்திற்குப் பார்வையாளர்கள் கைகளைத் தட்டியும், சிரிப்புக் கனைகளின் மூலமாகவும் பெரும் வரவேற்பு கொடுத்தனர். இந்த நாடகமானது அனைத்து வயதுடையவர்களையும்யும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...