அன்னூர் அருகே வேன் மரத்தில் மோதி விபத்து: இருவர் பலி - பத்து பேர் படுகாயம்

மேட்டுப்பாளையம்: உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்தவர்களின் வேன் அன்னூர் அருகே மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையம்: உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக வந்தவர்களின் வேன் அன்னூர் அருகே மரத்தில் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்டோர் உதகைக்கு சுற்றுலா செல்வதற்காக மினி வேன் மூலம் நேற்று இரவு புறப்பட்டு வந்தனர். இன்று காலை மேட்டுப்பாளையம் அன்னூர் சாலை வழியாக உதைக்கு வந்த வேன் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை அருகே இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், வேனில் பயணித்த ரிஷி என்ற ஒன்பது வயது சிறுவன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பினர்.

மேலும், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...