வெள்ளியங்கிரி தூய்மைப் பணியில் தென் கைலாய பக்தி இயக்கம்

கோவை: தென் கைலாய பக்தி இயக்கம் சார்பில் இன்று நடைபெற்ற வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியில் 315 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

கோவை: தென் கைலாய பக்தி இயக்கம் சார்பில் இன்று நடைபெற்ற வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியில் 315 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த இந்த சுத்திகரிப்பு பணியில் கோவை, சென்னை, கும்பகோணம், வேளூர், திருச்சி, பொள்ளாச்சி, சிதம்பரம், சிவகாசி, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து தன்னார்வத் தொண்டர்கள் வெள்ளியங்கிரி மலைப்பாதை மற்றும் முதல் ஐந்து மலைகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் சுத்திகரிப்பு பணியை மேற்கொண்டனர்.



வெள்ளியங்கிரியின் இயற்கை, அழகு மற்றும் புனிதத்தை காத்திடும் பொருட்டு, தென் கைலாய பக்தி இயக்கம், வெள்ளிங்கிரி சுத்திகரிப்பு பணியை, தங்கள் செயல் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாக கொண்டு செயல்பட்டு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மே 27 ஆம் தேதியன்றும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். மேலும், விவரங்களுக்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணியில் தன்னார்வலராக இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள அலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும் - 8300083111.

தென்கைலாய பக்தி இயக்கம் என்பது வெள்ளிங்கிரி பக்தர்களால் தென்கைலாய பக்தி பேரவை எனும் இலாப நோக்கம் இல்லாத அமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஆன்மீக இயக்கமாகும். இந்த இயக்கம் வெள்ளியங்கிரி பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் இம்மலையின் புனிதத்தை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...