நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி: நீலகிரி அருகே மது போதையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பல் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
உதகை மார்கெட் பகுதி எதிரே உள்ள புளுமவுண்டன் வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரவணன் என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் தனது மருத்துவமனைக்கு பல் சிகிச்சை மேற்கொள்ள வந்த 15 வயது சிறுமிக்கு மதுபோதையில் பாலியல் வன்கொடுமை கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் பலர் சேர்ந்து, பல் மருத்துவர் சரவணனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

அவரை உதகை மத்திய காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், இந்த வழக்கு உதகை மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உதகை மார்கெட் பகுதி எதிரே உள்ள புளுமவுண்டன் வளாகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சரவணன் என்பவர் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவர் தனது மருத்துவமனைக்கு பல் சிகிச்சை மேற்கொள்ள வந்த 15 வயது சிறுமிக்கு மதுபோதையில் பாலியல் வன்கொடுமை கொடுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறுமியின் உறவினர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் பலர் சேர்ந்து, பல் மருத்துவர் சரவணனை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

அவரை உதகை மத்திய காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர், இந்த வழக்கு உதகை மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.