கொத்து கொத்தாக செத்து மடிந்த மீன்கள்: குளத்து நீரில் கழிவுநீர் கலப்பதால் நேரும் அவலம்

கோவை: கோவையை அடுத்த சூலூர் பெரியகுளத்தில் கழிவுநீர் கலப்பதால், 5 டன் எடை அளவுள்ள மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையை அடுத்த சூலூர் பெரியகுளத்தில் கழிவுநீர் கலப்பதால், 5 டன் எடை அளவுள்ள மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் பகுதியில் உள்ள பெரியகுளம் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில், படகு இல்லமும் உள்ளது. இந்தக் குளத்தில் கழிவுநீர் கலந்து வருவதாகத் தொடர்ந்து பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதாகக் குள குத்தகையாளர்களுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அங்கு சென்று பார்த்த போது, 5 டன் எடை கொண்ட அளவு மீன்கள் செத்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



குளத்தில் இருக்கும் நீரை அருகில் இருக்கும் குடியிருப்புவாசிகள் திருடுவதாகவும், மேலும், அவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதன் காரணமாக மீன்கள் செத்து மடிந்ததாகவும் குத்தகையாளர்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, கழிவுநீர் கலப்பதை தடுக்கவும், குளத்து நீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...