கோவை : கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று பழுதானதால் அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பேருந்து மூலமாக பெங்களூர் அனுப்பப்பட்டனர்.
கோவை : கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று பழுதானதால் அதில் பயணம் செய்ய இருந்த பயணிகள் பேருந்து மூலமாக பெங்களூர் அனுப்பப்பட்டனர்.
கொச்சியில் இருந்து பெங்களூர் செல்லும் தனியார் விமானம் ஒன்று நேற்று இரவு 9 மணியளவில் கோவை விமான நிலையம் வந்தடைந்தது. இங்கிருந்து பெங்களூர் செல்ல தயாராக இருந்த விமானத்தில் 39 பயணிகள் இருந்தனர். இந்த நிலையில், விமானத்தில் பேட்டரி கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக பெங்களூர் செல்ல இருந்த பயணிகளை பேருந்து மூலம் அனுப்பியது விமான நிலைய நிர்வாகம். இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர்.