மேட்டுப்பாளையம் அருகே வலம் வரும் மர்ம விலங்கு : 10-க்கு மேற்பட்ட கால்நடைகள் பலி

கோவை : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வரும் மர்ம விலங்கு 10-க்கு மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது.

கோவை : கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வலம் வரும் மர்ம விலங்கு 10-க்கு மேற்பட்ட கால்நடைகளை கொன்றுள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த கெம்மாரம்பாளையம், வெள்ளியங்காடு, மேடூர் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம விலங்கு ஒன்று கால்நடைகளை தாக்கி கொன்று வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக இதனால் 10-க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் அருகே உள்ள ஆட்டுப்பட்டிகளை குறிவைத்து வேட்டையாடுவதாகக் கூறும் அப்பகுதி மக்கள், இந்த மர்ம விலங்கை கண்காணிப்பு காமிரா பொருத்தி கண்காணித்து பிடிக்க வலியுறுத்தி வருகின்றனர். 



இந்த நிலையில், நேற்று அந்த விலங்கு தாக்கியதில் ஆடு ஒன்று பலியாகியுள்ளது. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடி வரும் இந்த மர்ம விலங்கு மனித உயிரை காவு வாங்கும் முன்பு பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.a

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...