கோவை : வடவள்ளி பகுதியில் அ.தி.மு.க., அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அ.ம.மு.க.,வினர் 56 பேரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை : வடவள்ளி பகுதியில் அ.தி.மு.க., அ.ம.மு.க., ஆகிய கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் அ.ம.மு.க.,வினர் 56 பேரை வரும் 31-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நேற்று முன்தினம் வடவள்ளி பகுதியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மோதலில் தினகரன் ஆதரவாளர்கள் 56 பேர் மீது போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல், பொதுமக்களைத் தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், மேலும் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நேற்று நீதிமன்றத்தில் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன் 56 பேரையும் வரும் 31-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.


நேற்று முன்தினம் வடவள்ளி பகுதியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மோதலில் தினகரன் ஆதரவாளர்கள் 56 பேர் மீது போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல், பொதுமக்களைத் தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், மேலும் 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து நேற்று நீதிமன்றத்தில் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணன் 56 பேரையும் வரும் 31-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
