கோவை: கோவை விமான நிலையத்தில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால், எரிபொருளுக்கான வரிக்கு சலுகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு, கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
கோவை: கோவை விமான நிலையத்தில் தங்கும் விமானங்கள் இயக்கப்பட்டால், எரிபொருளுக்கான வரிக்கு சலுகை வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கு, கொங்கு குளோபல் ஃபார்ம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
கோவையில் காவலர் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவைக்கு இணைப்பு முறையில் வரும் விமானங்கள், அரசின் கோரிக்கையை ஏற்று இரவில் சேவையை வழங்கினால், எரிபொருளுக்கான வரிச்சலுகைப்படும் என அறிவித்திருந்தார். அரசின் இந்த அறிவிப்பிற்கு கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் கோவையின் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், தங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும் அமைச்சர் எஸ்.பி., வேலுமணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அரசின் இந்த நடவடிக்கையினால், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான வர்த்தகம் உயரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
கோவையில் காவலர் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவைக்கு இணைப்பு முறையில் வரும் விமானங்கள், அரசின் கோரிக்கையை ஏற்று இரவில் சேவையை வழங்கினால், எரிபொருளுக்கான வரிச்சலுகைப்படும் என அறிவித்திருந்தார். அரசின் இந்த அறிவிப்பிற்கு கொங்கு குளோபல் ஃபார்ம் மற்றும் கோவையின் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், தங்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்கும் அமைச்சர் எஸ்.பி., வேலுமணிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அரசின் இந்த நடவடிக்கையினால், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான வர்த்தகம் உயரும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.