திருப்பூர்: திருப்பூரில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
திருப்பூர்: திருப்பூரில் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியான மூன்று பேரின் குடும்பங்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் பல்லடம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அசோக்குமார், தெய்வாத்தாள் மற்றும் செளந்திரசீலன் ஆகியோர் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியானார்கள். இந்நிலையில், இயற்கை சீற்றங்களால் பலியான அவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நிவாரண உதவியாக 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கினர்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில் பல்லடம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அசோக்குமார், தெய்வாத்தாள் மற்றும் செளந்திரசீலன் ஆகியோர் இடி மற்றும் மின்னல் தாக்கி பலியானார்கள். இந்நிலையில், இயற்கை சீற்றங்களால் பலியான அவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்த மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி ஆகியோர் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, நிவாரண உதவியாக 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கினர்.