கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க., எம்.எல்.ஏ., போபையா நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், தற்காலிக சபாநாயகராக பா.ஜ.க., எம்.எல்.ஏ., போபையா நியமிக்கப்பட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இந்த நிலையில், தற்காலிக சபாநாயகரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது. இதனை தொடர்ந்து, விராஜ்பேட்டை தொகுதி பா.ஜ.க., எம்.எல்.ஏ., கே.ஜி. போபையா தற்காலிக சபாநாயகராக நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, போபையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இவர், கடந்த 2009 முதல் 2013 வரை பா.ஜ.க., ஆட்சியின் போது சபாநாயகராக செயல்பட்டார். மேலும், 2010-ல் எடியூரப்பாவிற்கு எதிராக 10 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கிய போது, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டவர் போபையா என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளார். இந்த நிலையில், தற்காலிக சபாநாயகரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடந்தது. இதனை தொடர்ந்து, விராஜ்பேட்டை தொகுதி பா.ஜ.க., எம்.எல்.ஏ., கே.ஜி. போபையா தற்காலிக சபாநாயகராக நியமித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, போபையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
இவர், கடந்த 2009 முதல் 2013 வரை பா.ஜ.க., ஆட்சியின் போது சபாநாயகராக செயல்பட்டார். மேலும், 2010-ல் எடியூரப்பாவிற்கு எதிராக 10 எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கிய போது, அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டவர் போபையா என்பது குறிப்பிடத்தக்கது.