குண்டும், குழியுமான மேட்டுப்பாளையம் மலைக்கிராம சாலைகள்: மருத்துவ அவசரத்திற்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களில் உள்ள 90 கி.மீ. தூர சாலைகள் பயணிக்கவே தகுதியற்ற நிலையில் இருப்பதால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்திற்குட்பட்ட மலைக்கிராமங்களில் உள்ள 90 கி.மீ. தூர சாலைகள் பயணிக்கவே தகுதியற்ற நிலையில் இருப்பதால், மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு கூட வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள வெள்ளியங்காடு என்னும் இடத்தில் இருந்து பில்லூர் அணை அமைந்துள்ள பரளிக்காடு வரை செல்லும் சாலையில் பூச்சமரத்தூர், தோண்டை, வேப்பமரத்தூர், வீரக்கல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. சுமார் 60 கி.மீ. நீளமுள்ள இச்சாலையின் வழியே நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கும் சென்றடையலாம். எனவே, உள்ளூர் மலைவாழ் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி சுற்றுலா செல்வோர் மற்றும் இதர வர்த்தக பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் இவ்வழியே சென்று வருகின்றன.



இதேபோல, தோலம்பாளையம் பகுதியில் இருந்து கோப்பனாரி வரை மலைக்கிராமங்கள் வழியே செல்லும் சுமார் 40 கி.மீ., தொலைவுள்ள சாலை வழியே கேரள மாநிலத்திற்கு செல்ல முடியும் என்பதால், போக்குவரத்து மிகுந்தே காணப்படுகிறது. ஆனால், இச்சாலைகள் முழுவதுமாக பழுதடைந்து குண்டும், குழியுமாக வாகனங்கள் கடந்து செல்லவே இயலாத வகையில் காணப்படுகின்றன. அடர்ந்த மலைக்காட்டின் வழியே செல்லும் இச்சாலையில் சென்றால் வாகனங்கள் பழுதடைந்து நின்று விடும் அல்லது விபத்துக்கள் ஏற்படும் என இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், கல்வி பயில செல்லும் கிராம மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவது மட்டுமின்றி, அவசர மருத்துவ தேவைகளுக்காக கூட இச்சாலையைப் பயன்படுத்த முடியவில்லை என்கின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் சார்பில் பல முறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் பலனில்லை என புகார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்ட போது, “இச்சாலையினை புதுப்பிக்க வனத்துறையினரின் அனுமதி தேவைப்படுகிறது. முறையான அனுமதி கிடைக்காததின் காரணமாகவே சாலை சீரமைப்பு பணிகள் தாமதமாகிறது” எனக் கூறினர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள மலைக்கிராமங்களை இணைக்கும் சாலைகள் அனைத்தும் பயணிக்கவே இயலாத வகையில் பழுதடைந்து, பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை செப்பனிடப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...