திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை ஏற்றது உச்சநீதிமன்றம்: காவிரி வழக்குகள் முடித்து வைப்பு

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்குகளை முடித்து வைத்தது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில், திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்குகளை முடித்து வைத்தது.

மாநிலஅரசுகள் தெரிவித்த கருத்துகள் அடிப்படையில், காவிரி நதிநீர் பங்கீட்டை முறைப்படுத்துவது குறித்த, திருத்தப்பட்ட வரைவு செயல்திட்ட அறிக்கையை, உச்சநீதிமன்றத்தில் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், மேலாண்மை வாரியம் என்பதற்கு பதில், மேலாண்மை ஆணையம் என்ற பெயரில், 10 உறுப்பினர்கள் அடங்கிய குழு செயல்படும். நீர் பங்கீடு தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், மேலாண்மை ஆணையத்திடம் இருக்கும். முக்கிய முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மத்திய அரசின் ஆலோசனையை பெறலாம். மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம், டெல்லியில் செயல்படும் என மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இறுதி தீர்ப்பளித்த நீதிபதிகள், மத்திய அரசின் திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். மேலும், இந்தக் காவிரி மேலாண்மை ஆணையத்தை நடப்பு பருவ காலத்திற்கு முன்பு செயல்படுத்த வேண்டும். இதனை அரசிதழில் உடனடியாக வெளியிட வேண்டும் எனக்கூறி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது. மேலும், மத்திய அரசுக்கு எதிராக அவமதிப்பு ஏதுமில்லை எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...