கல்வி உரிமை சட்டத்தின்கீழ் இலவச கல்வி; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். 



ஏழை, மற்றும் பின் தங்கிய மாணவர்களுக்கும் தரமான கல்வி கடைக்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு இடங்களை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரை இலவசமாக படிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

மேலும், விண்ணப்பங்களை இணையதளம் மட்டுமல்லாமல் மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார வள மையம், தமிழக அரசின் இ-சேவை மையங்களிலும் செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். இன்று மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம். மொத்தமுள்ள 1 லட்சம் இடங்களுக்கு இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பித்துள்ள பள்ளிகளில், முன்னுரிமை அடிப்படையிலும், குலுக்கல் முறையிலும் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள், விண்ணப்பம் நிராகரிப்பட்டதற்கான காரணங்களை சம்பந்தபட்ட பள்ளிகள் 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பள்ளியில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...