கோவையில் ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பட்டா உட்பிரிவு மாற்ற ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் பட்டா உட்பிரிவு மாற்ற ரூ. 20,000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சூலூர் அருகே உள்ள வாரப்பட்டி பகுதியில் நில அளவையாளராக கதிரேசன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் வாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி 2.5 ஏக்கர் நிலத்தைப் பட்டா உட்பிரிவு மாற்ற கதிரேசனை அணுகியுள்ளார். அப்போது, பட்டா உட்பிரிவு மாற்ற விவசாயிடம் ரூ. 35 ஆயிரம் லஞ்சமாக தருமாறு நிலஅளவையாளர் கதிரேசன் கேட்டுள்ளார். முதற்கட்டமாக ரூ. 10 ஆயிரம் கொடுத்த விவசாயி, மேற்கொண்டு பணத்தை வழங்க விரும்பவில்லை.



எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விவசாயி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, அவர்களது அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைப் பெற்றுக் கொண்ட விவசாயி, நிலஅளவையாளர் கதிரேசனிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கதிரேசனை கையும், களவுமாகப் பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரத்தைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சிங்காநல்லூரில் உள்ள கதிரேசனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...