கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்று கொண்டார். பதவியேற்றவுடனே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்று கொண்டார். பதவியேற்றவுடனே விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். 

கர்நாடகாவில் 222 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க., 104 இடங்களை வென்றது. அங்கு ஆட்சியமைக்கத் தேவையான 113 இடங்களை எந்தக் கட்சியும் பெறவில்லை. இதையடுத்து காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சார்பில் 116 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் ம.ஜ.த., தலைவர் குமாரசாமி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் பெரும்பான்மை இல்லாத போதும் தனிப்பெரும் கட்சி என்கிற முறையில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று அறிவிக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நள்ளிரவில் மனு அளிக்கப்பட்டது. 



இந்நிலையில், இன்று காலை பெங்களூருவில் ஆளுநர் மாளிகையில் எடியூரப்பாவின் பதவியேற்பு விழா நடைபெற்றது. அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில் அவருடன் வேறு அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடியூரப்பா கர்நாடகாவில் ரூ.1 லட்சம் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...