உதகையில் சுற்றுலா பயணியின் கார் மீது மரம் விழுந்து விபத்து

நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார். 

நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் நாள்தோறும் பேருந்துகள் வந்து செல்கின்றன. கேரளா, கர்நாடகா வாகனங்கள் உதகை தலைகுந்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் 100-க் கணக்கான வாகனங்கள் உதகையை வந்தடைகின்றன.

இந்நிலையில் கேரளாவிலிருந்து தலைகுந்தா, பாரதியார் நகர் பகுதியில் கேரளா மாநில கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் மீது அங்கிருந்த பழமையான மரம் ஒன்று விழுந்தது. இந்த விபத்தில் வாகன ஓட்டுநர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



மேலும், மரம் மின் கம்பி மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இனி வரும் மழைக் காலங்களுக்குள் சாலையோரம் விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றினால் மட்டுமே பாதுகாப்பான பயணம் செய்ய முடியும் என்பதே வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் தேக்கம் மற்றும் வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்க...

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...