காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் தர்ணா..!

கோவை: கோவையில் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 1.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவையில் பண மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக ரூ. 1.5 லட்சம் பணத்தை பெற்று ஏமாற்றிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சுமையா சையத். இவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால், இரட்டிப்பாகப் பணம் தருவதாகக் கூறி பெனாசிர் பானு என்பவர் ரூ. 7 லட்சம் பணம் பெற்றதாகத் தெரிகிறது. ஆனால், கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பெனாசிர் பானு மீது மீது நடவடிக்கை எடுக்கக் கோவை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் கலையரசியை அணுகியுள்ளார். அப்போது, இந்தப் புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க ஆய்வாளர் ரூ. 1.5 லட்சம் கையூட்டு பெற்றதாகவும், பணத்தை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சுமையா சையத் கூறியுள்ளார். 

மேலும், தற்போது வழக்கை திரும்பப் பெறவில்லை எனில், விபச்சார வழக்கில் கைது செய்வோம் என மிரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, மோசடி செய்தவர் மீதும், காவல் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு வந்த பந்தயசாலை காவல் துறையினர் சமரசப்படுத்தியதை அடுத்து, சுமையா சையத் போராட்டத்தை கைவிட்டார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...