சாலையில் சென்ற காரில் திடீர் தீ விபத்து

திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

திருப்பூர் : திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நெசவாளர் காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. அதே பகுதியில் இரண்டு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வெள்ளியங்கிரி நேற்று இரவு தனது நண்பர்கள் இருவருடன் கார் மூலம் திருநள்ளாறு கோவில் சென்றுவிட்டு திருப்பூர் நோக்கி வந்தார். 

கார் காங்கேயம் சாலையை கடந்து வளம் பாலம் அருகே வந்துகொண்டிருந்த போது காரின் முன்புறம் உள்ள ஹெட்லைட்டில் திடீரென புகை வந்துள்ளது . இதனைக் கண்டு உடனடியாக காரை ஓட்டி வந்த வெள்ளியங்கிரி மற்றும் அவரது நண்பர்கள் அவசர அவசரமாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். 



இந்த தீ விபத்தால் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...