பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு : மேலும் ஒருவர் சரண்

கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இருவர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கோவை: கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் இருவர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகம் மீது இன்று அதிகாலை சில நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டுத் தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்த சம்பவம் தொடர்பாக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கவுதம் என்ற தந்தை பெரியார் திராவிடர் கழக உறுப்பினர் சாயிபாபாகாலனி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பாக, சரணடைந்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...