கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, பணம் கொள்ளை

கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.



கோவை: கோவை மற்றும் திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 43 சவரன் நகை, ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது. 

சூலூரில் வசித்து வருபவர் ரங்கசாமி. ஓய்வுபெற்ற அரசு ஊழியர். கடந்த வியாழன் அன்று ரங்கசாமி தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கொடுமுடிக்கு சென்றார். இந்நிலையில், நேற்று மாலை வீடு திரும்பிய ரங்கசாமி முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்த போது பீரோ-வில் இருந்த 25 சவரன் நகை, தொலைக்காட்சி பெட்டி மற்றும் மைக்ரோ வேவ் ஓவன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.



இதையடுத்து ரங்கசாமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மற்றொரு சம்பவம்

திருப்பூர் தாராபுரம் சாலை அமராவதிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் அருண. டையிங் தொழில் செய்து. நேற்று காலை உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் சிவன்மலை சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 18 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். திருமண நிகழ்ச்சி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய அருண் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது இக்கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...