கோனியம்மன் கோவில் தேரோட்டம்: கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுவதையொட்டி கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெறுவதையொட்டி கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றும் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவையின் புகழ் பெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று மதியம் 2:00 மணி முதல் நடைபெறுகிறது. இதையடுத்து மதியம் 12:00 முதல் இரவு, 8:00 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:- 

  • அவினாசி சாலையில் இருந்து பழைய மேம்பாலம் வழியாக வரும் கனரக வாகனங்கள், ஜே.எம்., பேக்கரி சந்திப்பிலிருந்து இடது பக்கம் திரும்பி ரயில்வே ஸ்டேஷன் வழியாக அல்லது அரசு கலை கல்லுாரி சாலை வழியாக கிளாசிக் டவர் சென்று வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
  • அவினாசி சாலை பழைய மேம்பாலத்திலிருந்து உக்கடம் செல்லும் இலகுரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள், மரக்கடை, என்.எச்., ரோடு, டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.
  • பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலையிலிருந்து வரும் வாகனங்கள் உக்கடம் அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அடைந்து வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம் அல்லது பேரூர் பைபாஸ் சாலை வழியாக செல்லலாம்.
  • மேட்டுப்பாளையம் சாலை, சுக்கரவார்பேட்டை, பூமார்க்கெட் மற்றும் புரூக்பாண்ட் சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பழைய மேம்பாலம் வழியாக மரக்கடை, என்.எச்.,சாலை அடைந்து உக்கடம் செல்லலாம்.பொள்ளாச்சி சாலையிலிருந்து திருச்சி மற்றும் காந்திபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் பைபாஸ் சாலை வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் அடைந்து வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம். 
  • தடாகம் சாலையிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் செல்லலாம்.பேரூர் சாலையில் வரும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், தடாகம் சாலை வழியாக காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்குச் சென்று கொள்ளலாம்.
  • லாரி போக்குவரத்து காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை நகருக்குள் தடை செய்யப்பட்டுள்ளது.
  • இதேபோன்று தேர் வரும் சாலையிலுள்ள ராஜவீதி, வைசியாள் வீதி, ஆர்.ஜி., வீதி, ஒப்பணக்காரவீதி, கே.ஜி., வீதி போன்ற பகுதிகளில் அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை தேர்வரும் சாலையில் நிறுத்தாமல் மாற்று இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது.
  • இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...