கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி: புளுவேல் விளையாட்டு காரணமா?

மதுரையில் கல்லூரி மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு புளுவேல் விளையாட்டு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை: மதுரையில் கல்லூரி மாணவர் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்ய முயற்சி செய்ததற்கு புளுவேல் விளையாட்டு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை நேதாஜிரோடு அருகில் வசித்து வருபவர் விக்னேஷ். இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருடைய தந்தை மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று நேற்று விக்னேஷ்-ன் பெற்றோர்கள் அழகர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

வீட்டில் தனிமையில் இருந்த விக்னேஷ் சக நண்பர்களின் பேஸ்புக் பக்கத்தில் தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இவரின் சக நண்பர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் வீட்டின் புட்டை உடைத்துப் பார்த்த பொழுது கையை பிளேடால் அறுத்து ரத்த வெள்ளத்தில் விக்னேஷ் கிடந்துள்ளார். அவரை மீட்டு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவர் விக்னேஸ் தற்கொலை முயற்சிக்குக் காரணம் காதல் தோல்வியா? அல்லது புளுவேல் விளையாட்டா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...