கேரளாவில் வாலிபர் அடித்துக் கொலை : பழங்குடியின் மக்கள் சாலைமறியல்

கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழங்குடியின் மக்கள் இன்று அகலியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பழங்குடியின் மக்கள் இன்று அகலியில் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



 

கேரள மாநிலம், பாலக்காடு அருகே அட்டப்பாடியில் கடுகுமன்னா பகுதியில் திருடன் எனக் கூறி பழங்குடி இனத்தைச் சேர்ந்த வாலிபர் மது (27) என்ற வாலிபர் கடந்த இருதினங்களுக்கு முன்பு பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று மாலை அவரது உறவினர்களிடம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, உடலைப் பெற்றுக் கொண்ட பழங்குடியின மக்கள் அகலி பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதையறிந்த, கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, பா.ஜ.க., கேரள மாநிலத் தலைவர் மற்றும் அத்தொகுதி சி.பி.எம்., எம்.எல்.ஏ.,க்கள் அவர்களை சமாதானப்படுத்தி மறியலை கைவிடச் செய்தனர். மேலும், கேரள அரசு அறிவித்த ரூ. 10 லட்ச ரூபாய்க்கு பதிலாக ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த ரமேஷ் சென்னிலா, இதுபோல, ஆதிவாசியின மக்கள் கேரளத்தில் பாதிக்கப்படக்கூடாது என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...