அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தீவிரம்

கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 16 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

நீலகிரி: கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 16 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. 

நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்தாண்டு கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே மாதம் 122-வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், 16 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யும் பணியில், தற்போது பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோடை சீசனையொட்டி சால்வியா, டெல்பீனியம், சைக்லமன், ஓரியண்டன், ஜெரோனியம் உள்பட 230 வகையான மலர் செடிகள் பல வண்ணங்களில் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது. மேலும், தற்போது மாவட்டத்தில் பனிப்பொழி தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் மலர் நாற்றுகள் கருகாமல் இருக்க கோத்தகிரி செடிகளை வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...