கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 16 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
நீலகிரி: கோடை சீசனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் 16 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்தாண்டு கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே மாதம் 122-வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 16 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யும் பணியில், தற்போது பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோடை சீசனையொட்டி சால்வியா, டெல்பீனியம், சைக்லமன், ஓரியண்டன், ஜெரோனியம் உள்பட 230 வகையான மலர் செடிகள் பல வண்ணங்களில் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது. மேலும், தற்போது மாவட்டத்தில் பனிப்பொழி தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் மலர் நாற்றுகள் கருகாமல் இருக்க கோத்தகிரி செடிகளை வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்தாண்டு கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வருகிற மே மாதம் 122-வது மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 16 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யும் பணியில், தற்போது பூங்கா ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோடை சீசனையொட்டி சால்வியா, டெல்பீனியம், சைக்லமன், ஓரியண்டன், ஜெரோனியம் உள்பட 230 வகையான மலர் செடிகள் பல வண்ணங்களில் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு விருந்தளிக்கக் காத்திருக்கிறது. மேலும், தற்போது மாவட்டத்தில் பனிப்பொழி தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் மலர் நாற்றுகள் கருகாமல் இருக்க கோத்தகிரி செடிகளை வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.