கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் : வீரபாண்டியன்

புதியதாக அரசியல் கட்சியை துவங்கி உள்ள கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவை: புதியதாக அரசியல் கட்சியை துவங்கி உள்ள கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையை அடுத்த நேருநகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், கிழக்கு மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது :- காவிரி நதிநீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி இருப்பது நல்ல விஷயமாக அமைந்து உள்ளது. விரைவில் பேசி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது. இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். 

புதிய கட்சியை தொடங்கியுள்ள கமலஹாசன் இடதுசாரியும் அல்ல, வலது சாரியும் அல்ல என கூறி இருப்பது அரசியலே இல்லை. அவர் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை முறையாகக் கூற வேண்டும். என்றார். 

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், கிழக்கு மண்டல மாநாட்டில், கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும், பாதாள சாக்கடை பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...