கழிவு பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து : ஒரு கோடி மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசம்

கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் உள்ள கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின.


கோவை : கோவை மாவட்டம் காளப்பட்டி பகுதியில் உள்ள கழிவு பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து சாம்பலாகின.



காளப்பட்டியில் உள்ள என்.ஜி.பி. கல்லூரிக்குப் பின்புறம் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான சந்திரா கழிவு பஞ்சு குடோன் உள்ளது. இதில், இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது, பஞ்சு குடோன் என்பதால், மற்ற பகுதிகளுக்கும் மளமளவெனப் பரவியது.  இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கபட்டதைத் தொடர்ந்து, பீளமேடு, கணபதி, தெற்கு தீயணைப்பு அலுவலகங்களில் இருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் முழுமையாக தீ அணைக்கப்படவில்லை. இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முழு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

தீ விபத்து குறித்து உரிமையாளர் ஸ்ரீராம் தெரிவிக்கையில், ''1,500 டன் கழிவு பஞ்சு எரிந்து நாசமாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் இருக்கும்.'' என்றார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...