அடிப்படை வசதிகளும் இன்றி தவிக்கும் கிராம மக்கள் : வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் திக், திக் வாழ்க்கை...!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெல்வியூ கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள், வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெல்வியூ கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள், வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். 

நடுவட்டம் பேரூராட்சியில் உள்ளது பெல்வியூ கிராமம். இக்கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த நிலையில், தங்களது வாழ்வாதாரத்திற்காக சமவெளி பிரதேசங்களுக்குப் பல குடும்பங்கள் இடம் பெயர்ந்துவிட்டனர். இதனால், தற்போது வெறும் 40 குடும்பங்களே வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கிராமத்தில் வாழ்வாதாரமாக தேயிலை விவசாயம் மட்டுமே தான் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தனியார் தேயிலை தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில், வெளி மாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்தவர்கள் பணி புரிந்து வந்தனர்.



தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், தொழில் நலிவடைந்ததால், தனியார் தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால், அங்கு பணிபுரிந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலை இல்லாமல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியது. இதனால், கடந்த 30 ஆண்டுகளாக தேயிலை செடிகளுக்கு நடுவே உள்ள புதர் செடிகளை அகற்றுவதனால் வரும் கூலியை வைத்தே, அவர்கள் தங்களது குடும்பங்களை நடத்தி வருகின்றனர்.



இதனிடையே, பழைய தொழிற்சாலை நிர்வாகம் மூலம் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்ததாகவும், இந்தத் தொழிற்சாலை மூடி 30 வருடங்களாக குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற வசதிகள் இல்லாமல் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக இக்கிராம மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.



குறிப்பாக, கடந்த 30 வருடங்களாக தேர்தல் நேரங்களில் மட்டும் தங்களது கிராம மக்களை சந்திக்கும் கட்சியினர், வெற்றி பெற்ற பிறகு யாரும் தங்களை பார்ப்பதில்லை என பெல்வியூ கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கர்ப்பிணி பெண்களோ அல்லது அவசர சிகிச்சைக்காக மருத்துவனைக்கு செல்ல வேண்டுமானால், உதகை அல்லது கூடலூர் பகுதிக்கு தான் செல்ல வேண்டியநிலை இருப்பதாகவும், தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற எந்தவித அரசு சலுகைகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

மேலும், வனப்பகுதியைச் சேர்ந்த இடமாக உள்ளதால் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதாகவும், காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதம் செய்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இரவு நேரங்களில் மின்சார வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும், தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டுமானால், 4 கிலோ மீட்டார் வனப்பகுதி சாலை வழியாக டி.ஆர். பஜார் மற்றும் 28 கி.மீ தள்ளியுள்ள கூடலூர் பகுதிக்குதான் சென்று படிக்க வேண்டிய நிலை இருப்பதாக வேதனைத் தெரிவித்த அவர்கள், சரியான நேரத்தில் அரசு பேருந்துகளும் இயக்கப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...